சிங்கப்பூர்: ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் நேற்று பிப்., 3, வெள்ளிக்கிழமை அதிகாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அது 49 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் என்றும், ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கை ஒட்டிய கடலில் கண்டெடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
Toto Hong Bao குலுக்கல்: S$12 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய 3 பேர்!
அதிகாலை 5.45 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அதே போல, காலை 6 மணியளவில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் (SCDF) அழைப்பு வந்தது.
அதன் பின்னர் விரைந்து வந்த அதிகாரிகள் அந்த பெண்ணை மீட்டு சோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இதில் சதி ஏதும் நடந்ததாக தெரியவில்லை என்றும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் – மடக்கி பிடித்த போலீஸ்