சிங்கப்பூரில் பேருந்தை நிறுத்தி நடிகை கஜோலின் மகளிடம் ஆட்டோகிராப் கேட்ட ரசிகர்கள்! – கஜோல் விளக்கம்!

bollywood actress kajol daughter nysa devgan
ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையான கஜோலின் மகள் நைசா தேவ்கனிடம் சிங்கப்பூரில் ஆட்டோகிராப் கேட்ட ரசிகர்களை சந்தித்தது பற்றி நடிகை விவரித்துள்ளார்.
ஒரு நேர்காணலில் பேசிய கஜோல்,அவர் சினிமாவில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு,பலருக்கும் தன்னைத் தெரியாததால் பயண சுதந்திரம் இருந்ததாகக் கூறினார்.கஜோல் மற்றும் அவரது கணவர் நடிகர் அஜய் தேவ்கனின் மகள் நைசா தேவ்கன்.
சிங்கப்பூரில் படித்து வரும் நைசா சமூகவலைத் தளத்தில் அடிக்கடி இடுகைகள் இடுவதன் மூலம் பிரபல நடிகையான கஜோலின் மகள் என்பது பலருக்கும் தெரிந்துள்ளது.
இதனைக் குறிப்பிடும் வகையில் “எங்கள் சிறு வயதில் சமூக ஊடகங்கள் இருந்ததில்லை.அதனால் தனிநபர் பற்றி அவர்களுக்கு நெருக்கமானவர்கள்,உறவினர்களுக்கு மட்டுமே தெரியும்” என்று கஜோல் கூறினார்.

கஜோல் 1992 இல் ராகுல் ராவைல் இயக்கிய பெகுடி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.”நான் படங்களில் நடிக்கத் தொடங்கும் வரை நினைத்த இடங்களுக்கு சுதந்திரமாக பயணித்திருக்கிறேன்.
அதற்குப் பின்னர்,லண்டன் போன்ற நாடுகளுக்குச் சென்றாலும் ரசிகர்கள் சுற்றி வளைக்கும் சம்பவம் குறைந்த அளவிலேதான் இருந்தது.” என்று கூறினார். ஆனால் பேருந்தை நிறுத்தி மகள் நைசாவிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் எடுத்திருக்கிறார்கள் என்பது விசித்திரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.