துர்நாற்றம் வீசப்பட்ட நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட முதியவர் – போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை !

elderly man deceased

பிளாக் 214 பூன் லே பிளேஸில் உள்ள பிளாட்டின் மாஸ்டர் பெட்ரூமில் 79 வயது முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் கடைசியாக அறைக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 13, சனிக்கிழமை மாலை துர்நாற்றம் வீசப்பட்ட நிலையில் அந்த பிளாட்டில் வாடகைக்கு இருப்பவரால் இறந்தவரின் உடலை கண்டுபிடிக்க முடிந்தது.

வாடகைக்கு இருப்பவரான டெங் தனது நில உரிமையாளரான லின் ஹுய்குவானை மூன்று நாட்களாகப் பார்க்கவில்லை என்றும் சனிக்கிழமை மாலை அபார்ட்மெண்டிற்குள் நுழைந்து வாசனையைக் கண்டறிந்தபோது ஏதோ தவறு இருப்பதை உணர்ந்த டெங் உடனே போலீசுக்கு போன் செய்ததாகவும் கூறியுள்ளார் டெங். இரவு 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரால் ​​​​அறையில் இருந்த உடல் அகற்றப்பட்டது.

மேலும் சனிக்கிழமை காலை டெங் வேலைக்குச் சென்றபோது துர்நாற்றம் இல்லை என்றும் கூறியுள்ளார். இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், இயற்கைக்கு மாறான மரணமாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.