சிங்கப்பூரில் ஐந்து நாட்களாக 15 வயது சிறுவன் ஒருவரை காணவில்லை என்று போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அதனை தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.
பிழைப்புக்காக சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள், சடலமாக செல்லும் சோகம்… மேலும் ஒரு ஊழியர் மரணம்
முஹம்மது குஸ்யாரி பின் மலாஹ் (Muhammad Qusyairie Bin Malah), என்ற அவர் கடைசியாகக் கடந்த ஜூன் 13 அன்று பிளாக் 250 புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 5க்கு அருகில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் Warehouse கிடங்கில் பயங்கர தீ.. 13 அவசர ஊர்திகளுடன் விரைந்து சென்றது SCDF