சிங்கப்பூருக்கு அரசு பயணம் மேற்கொண்ட புருனேயின் சுல்தான் அதிபர் ஹலிமா யாக்கோபை சந்தித்துப் பேசினார்.இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றது.
எரிபொருள்,பசுமைப் பொருளாதாரம்,உணவு,மருத்துவப் பொருள் விநியோகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துகின்றன.
இரண்டு நாள் வருகையளித்த சுல்தான் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த அதிபரிடம் கலந்துரையாடினார்.
கரிமம் குறைவான தொழில் நுட்பம்,கரிம சேகரிப்பு போன்ற வளர்ந்துவரும் துறைகளில் இரு நாடுகளின் பருவநிலை இலக்கை அடைய இரு தரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்.
அதிபர் ஹலிமா யாக்கோபின் அழைப்பை ஏற்று சுல்தான் அவரது மனைவி இருவரும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.