புக்கிட் பஞ்சாங்கில் கார் மோதிய சம்பவத்தில் 70 வயது பாதசாரி ஒருவர் கடந்த திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார்.
கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் புக்கிட் பஞ்சாங் ரிங் ரோட்டில் ஜெலேபு சாலையை நோக்கி ஏற்பட்ட விபத்து குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கொடுக்கப்பட்டன.
இந்திய ஊழியர் வாகனம் மோதி மரணம் – வேலையிடத்தில் நடந்த சோகம்
அதன் பின்னர் மீட்கப்பட்ட அவர் சுயநினைவுடன் இங் டெங் போங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அதன் பின்னர் அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், 41 வயதான கார் ஓட்டுநர் ஒருவர் தொடர்ந்து விசாரணைக்கு உதவி வருகிறார்.
போக்குவரத்து விளக்கைக் கடக்கும் இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் அவர் சாலையைக் கடந்தார் என்று ஸ்டாம்ப் செய்தித் தளத்திடம் நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறினார்.