ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள பர்கர் & லாப்ஸ்டர் (Burger & Lobster) உணவகத்தின் தரம் “A” இலிருந்து “C”க்கு மாற்றம் கண்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) தெரிவித்துள்ளது.
இந்த தரம் குறைப்பு கடந்த டிசம்பர் 2, 2022 முதல் நடப்புக்கு வந்துள்ளதாக SFA கூறியுள்ளது.
மேலும் அதன் தரம் 12 மாதங்களில் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என்று SFA செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அந்த கடை முற்றிலும் SFA கண்காணிப்பில் இருக்கும் எனவும் அது கூறியது.
கடந்த மே 7 மற்றும் 15க்கு இடையில் அந்த கடையில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட 132 நபர்களுக்கு இரைப்பை குடல் அழற்சி அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி… ரூ.18 லட்சம் பொருள் கடத்தல் – சிக்கிய ஊழியர்