மாண்டாய் அருகே கொழுந்து விட்டெறிந்த பேருந்து (காணொளி) – தீக்கு இறையாய் போனது

bus fire

மாண்டாய் சுடுகாடு அருகே உள்ள மாண்டாய் அவென்யூவில் கடந்த டிசம்பர் 16 மதியம் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இந்த சம்பவம் குறித்து ஸ்டாம்ப் தகவல் வெளியிட்டுள்ளது, பேருந்தில் இருந்து கரும்புகை வானோங்கி வெளியேறும் காணொளியும் பகிரப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சென்ற உரிமையாளர் – ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டிய நிறுவன ஊழியர்கள்!

வலைத்தளங்களில் அது தொடர்பான காணொளி பெரிதும் வைரல் ஆனது.

இதனால் முழு சாலையிலும் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

அன்று மதியம் 2 மணியளவில் தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

காயங்கள் ஏதும் இல்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சட்டத்தை மீறிய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறைத்தண்டனை