பள்ளி குழந்தைகளின் தவறான படங்களை அனுப்புமாறு கேட்ட ஓட்டுநர்.. அனுப்பி வைத்த பணிப்பெண் – போலீசிடம் சிக்கிய கதை

மோட்டார் சைக்கிளை திருடி
File Photo : Singapore Police arrested

பேருந்து ஓட்டுநர் ஒருவர் உடற் குறைபாடு உள்ள குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நிலையில் போலீசிடம் பிடிபட்டுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், சிறுமிகளின் ஆபாசமான புகைப்படங்களை தனக்கு அனுப்புமாறு பணிப்பெண்களிடம் அவர் கேட்டுள்ளார்.

அதற்கு இணங்கிய பணிப்பெண் ஒருவர் தனது முதலாளியின் குழந்தையின் பாலியல் ரீதியான படங்களை அவருக்கு அனுப்பியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து அவர் போலீசிடம் பிடிபட்டபோது, ​​​​அவரது பேருந்தில் பயணிக்கும் பல குழந்தைகளின் பாலியல் புகைப்படங்களும் அவரிடம் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

கேரி அலெக்சாண்டர் டான் (68) என்ற அவர் பாலியல் துன்புறுத்தல், சிறு வயதினரிடம் ஆபாசமான படங்களை காட்டியது மற்றும் பெண்ணின் அந்தரங்கத்தை அவமதித்தது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளை இன்று திங்கள்கிழமை (டிச.19) ஒப்புக்கொண்டார்.

மேலும் எட்டு குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது பரிசீலிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

டானுக்கு திருமணம் ஆகி மூன்று பெரிய வயது குழந்தைகள் உள்ளன.

2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில், மழலையர் பள்ளி மற்றும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளை அழைத்துச் செல்ல டான் பள்ளி ஒன்றால் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.