பேருந்து ஓட்டுனர்களைத் துன்புறுத்தும் பயணிகள்! – ஒரு போதும் சகித்துக்கொள்ள முடியாது!

sbs-bus-captain-shelter-heavy-rain
Shaheera Effendi from Mothership

சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுனர்கள் பயணிகளால் தாக்கப்பட்ட சம்பவம் இந்தாண்டு 27 ஆக பதிவாகியுள்ளன.முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பேருந்து ஓட்டுனர் மீதான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இது போன்ற சம்பவங்களைத் தடுக்க சிங்கப்பூரில் உள்ள விதிமுறைகள் போதுமானவையா என்று ஆய்வு செய்ய அதிகாரிகள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பயணிகளை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கும் ஓட்டுனர்களை பாராட்ட வேண்டும்.அவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல் கண்டனத்திற்குரியது.

பொதுப் போக்குவரத்து ஊழியர்களைத் துன்புறுத்தும் செயல்களை அரசாங்கம் ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என போக்குவரத்து மூத்தத் துணை அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார்.2018இலும் 2020இலும் பேருந்துகளில் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.