ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1இல் மூன்று பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது, அவர்களை மீறி சிவப்பு விளக்கை மதிக்காமல் பேருந்து வேகமாகச் சென்றது.
கடந்த டிசம்பர் 28, 2021 அன்று மாலை நடந்த இந்த சம்பவத்தின் Dashcam காட்சிகளை Beh Chia Lor என்ற Facebook குழு பகிர்ந்துள்ளது.
“முழு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்” என்ற நிலையை தக்க வைக்க இது கட்டாயம்!
மதர்ஷிப்பின் கேள்விகளுக்குப் பதிலளித்த SBS டிரான்சிட் நிறுவனம் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்ததாகவும், பேருந்து ஓட்டுனரின் இந்த ஆபத்தான செயல் மன்னிக்க முடியாதது என்றும் அது கூறியது.
SBS ட்ரான்சிட்டின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மூத்த துணைத் தலைவர் டம்மி டான் கூறுகையில், இதில் யாரும் காயமடையாததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும், இதனால் பாதசாரிகள் நிலைகுலைந்ததற்கு அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
இந்தத் தவறை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என்றும், மேலும் பேருந்து ஓட்டுனருக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்று டான் கூறினார்.
சிங்கப்பூரில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த ஆடவர்.. சடலமாக கண்டெடுப்பு