சாலைத் தடுப்பு மீது ஏறி சென்ற பேருந்து… கடும் போக்குவரத்து நெரிசல் – வாகனமோட்டிகள் பாதிப்பு

accident-main
Stomp

East Coast சாலையில் பேருந்து ஒன்று சாலைத் தடுப்பு மீது ஏறி சென்றதால் கடந்த சனிக்கிழமை அன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனமோட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள்.

சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழக ஊழியர் மீது மனைவி கொடுத்த புகார் – கைது செய்த போலீஸ்!

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஸ்டாம்ப் வாசகர்கள் பகிர்ந்துள்ளனர்.

பகிரப்பட்ட வீடியோ காட்சிகளில், பேருந்து விபத்துக்குள்ளாகி நிற்கும் இடத்திற்கு அருகில் கூட்டம் ஒன்று கூடி நிற்கிறது, அதே நேரத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் காணலாம்.

“பேருந்து சிக்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது” என மார்கஸ் என்ற ஸ்டாம்ப் வாசகர் கூறினார்.

East Coast சாலை மற்றும் ஜகோ குளோஸ் (Jago Close) சந்திப்பில் மற்று மாலை 6.22 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத செயல்: ரகசிய கோட் வேர்ட்…ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!