ஜலான் சுல்தான் பகுதியில் பீச் ரோடு சந்திப்பில் கடந்த மார்ச் 20 அன்று கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
அன்று இரவு 7.20 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்து, சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு (SCDF) தகவல் கிடைத்தது.
தோ பாயோவில் ஒருவரை தாக்கி கொள்ளை அடித்த சந்தேக நபர் கைது!
அங்கு வந்த SCDF வீரர்கள், தண்ணீர் ஜெட் கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
தீ கார் முழுவதும் பரவுதற்கு முன்பு இருவர் பத்திரமாக காரில் இருந்து வெளியேறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது விசாரணையில் உள்ளது.