ஹௌகாங்கில் புதன்கிழமை (மார்ச் 16) கார் ஒன்று விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனை அடுத்து, அந்த காரில் இருந்து மூன்று பேர் அவசரமாக வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது.
“மக்களைக் கொல்ல போறேன்” என போன் காலில் மிரட்டிய ஆடவர்: பெரிய ஆயுதத்துடன் கைது – சிறை!
இந்த விபத்து ஹௌகாங் அவென்யூ 9 நோக்கி செல்லும், ஹௌகாங் அவென்யூ 4ல் காலை 8.20 மணியளவில் நடந்தது.
கார் விளக்கு கம்பத்தில் மோதி சறுக்கி விழுந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த சிறிது நேரத்தில், விபத்துக்குள்ளான காரில் இருந்து மூன்று பேர் வெளியேறுவதை அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்ததாக சீன நாளிதழான ஷின் மின் டெய்லி நியூஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் போலீசார் கூறினர்.
மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.