மத்திய விரைவுச்சாலையில் (CTE) கடந்த ஆக. 11 அன்று ஏற்பட்ட விபத்தில் 26 வயதுமிக்க ஆடவர் ஒருவர் இறந்தார்.
அவருடன் பயணம் செய்த 26 வயதுமிக்க பெண் பயணியும் உயிரிழந்ததாக போலீசார் நேற்று (ஆக. 22) கூறினர்.
சுயநினைவின்றி கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் மரணித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
மத்திய விரைவுச்சாலையில் அன்று நள்ளிரவு 12.10 மணிக்கு கார் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தகவல் வந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) கூறியது.
காரில் பயணித்த 26 வயதுடைய ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக SCDF துணை மருத்துவர் உறுதி செய்தார்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
சிங்கப்பூரில் செப். 1-ம் தேதி பொது விடுமுறை நாள் – அனைத்து ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை