பாசிர் ரிஸ் டிரைவ் 8 இல் கார், டாக்சி மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
பின்னர் விபத்தில் சிக்கிய பெண், அவரது குழந்தை மற்றும் டாக்ஸி ஓட்டுநர் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட வெளிநாட்டுப் பயணிக்கு சிறை
கடந்த ஜன.23 அன்று நடந்த விபத்தின் காணொளியை Stomp வாசகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
தெம்பனீஸ் விரைவுச் சாலைக்குச் செல்லும் ஸ்லிப் சாலையில் நடந்த விபத்து குறித்து மாலை 6:35 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
35 வயது பெண் பயணியும் அவரது ஒரு மாத கைக்குழந்தையும் சுயநினையுடன் KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், 64 வயதான டாக்ஸி ஓட்டுநரும் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.