கொரோனா பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான பொதுப்போக்குவரத்து வழக்கமான நிலைக்கு திரும்பியுள்ளது. இதன் காரணமாக, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் (Woodlands Checkpoint) போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்த பாதசாரி ஆடவர்
இந்த நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே இருக்கும் பேருந்து நிறுத்தமானது இடமாற்றம் செய்யப்படுகிறது. வரும் ஏப்ரல் 27- ஆம் தேதி முதல் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (Land Transport Authority) அருகே பேருந்து நிறுத்தம் பயன்பாட்டிற்கு வருகிறது.
எனவே, ‘Causeway Link’ பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிறுத்தம் (Bus Bay) 13 மற்றும் 14- லிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கை மூலம் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு பேருந்து வழியாக பயணம் மேற்கொள்வோர், எவ்வித சிரமமின்றி எளிதாக பயணம் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.