சாங்கி விமான நிலையத்திலிருந்து டாக்ஸி எடுத்து செல்வோருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அந்த கட்டண உயர்வு ஜூன் 30, 2023 வரை அதாவது ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து டாக்ஸிப் பயணங்களுக்கும் தூர அடிப்படையிலான கட்டணங்களில் ஒரு காசு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் டாக்ஸி உறுதி செய்வதற்கான கூடுதல் கட்டணம் S$3 வெள்ளி என முதன்முதலில் மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த தற்காலிக உயர்வு 2022 ஆம் ஆண்டு இறுதி வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அது 2023 வரை அதாவது ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் உயிரியல் பூங்கா, ரிவர் வொண்டர்ஸ் மற்றும் நைட் சஃபாரி ஆகியவற்றிலிருந்து மாலை 4 மணி முதல் இரவு 11.59 மணி வரை பயணம் செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் S$3 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.