சாங்கி விமான நிலைய இரண்டாம் முனைய (T2) செயல்பாடுகளின் தடை காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குவதற்கு ஏற்றவாறு T2 முனையம் கட்டம் கட்டமாக திறக்கப்படும் என்று சாங்கி விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார்.
மகளிடம் தவறாக நடந்துகொண்ட கொடூர தந்தை: 42 மாத சிறை, ஆறு பிரம்படி விதிப்பு
அதேபோல, முன்னேறிவரும் பயணத்துறையின் தேவைகளையும் பூர்த்தி செய்ய விமான நிலையம் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
கிருமித்தொற்று காரணமாக பயணத்துறை பெரிய அளவில் அடிவாங்கியது. இதன் காரணமாக சாங்கி விமான நிலைய முனையம் 2 மற்றும் முனையம் 4 கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டது.
இரண்டாம் முனையத்தை 18 மாதங்கள் மூடிவைப்பது செயல்பாட்டு செலவினங்களை குறைக்கும் என்று அப்போதைய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அதன் மூலம் அந்த முனையத்தில் புதுப்பிப்பு பணிகளை துரிதப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
அதேபோல, 4ஆம் முனையம் எவ்வளவு காலம் மூடப்பட்டிருக்கும் என்பது குறித்த உறுதியான தகவலும் இல்லை.