சிங்கப்பூரில் பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சாங்கி விமான நிலையத்தின் முனையம்-4 எதிர்வரும் செப்டம்பர் 13 அன்று மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று சாங்கி விமான நிலையக் குழு (CAG) வெள்ளிக்கிழமை (ஜூலை 22) அறிவித்தது.தொற்றுநோய் விமானப் போக்குவரத்தில் இடையூறுகளை ஏற்படுத்தியதால் முனையத்தின் இயக்கத்தை 2020 இல் நிறுத்தியது.
16 ஏர்லைன்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் டெர்மினல் 4 க்கு இடமாற்றம் செய்யப்படும்.முனையம் மீண்டும் திறக்கப்படுவதன் மூலம் திக விமானங்களைத் தொடங்குவதற்கான விமான நிறுவனங்களின் திட்டங்களை ஆதரிக்க முடியும் என்று CAG ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
டெர்மினல் 4 இல் செயல்பாடுகளை சீராக மீள்திறப்பு செய்வதை உறுதி செய்வதற்காக, அடுத்த இரண்டு மாதங்களில் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய பங்குதாரர்களுடன் பல்வேறு தயார்நிலை சோதனைகளை நடத்த இருப்பதாக சிஏஜி தனது ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.