“தமிழர்களுக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் ஒரு முன் உதாரணம்” நெட்டிசன்கள் பகிரும் காணொளி..!

Singapore Changi Airport

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் கன்வேயர் பெல்ட்டில் இருவேறு புறத்தில் இருந்தும் சூட்கேஸ்கள் ஒரு இடத்தில் வந்து நிற்கும் போது முன்னர் வரும் பெட்டிகளுக்கு வழிவிட்டு மறுபுறமுள்ள பெட்டி காத்திருக்கும் வகையில் சென்சார் செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதற்கேற்றவாறு ஒவ்வொரு பெட்டியும் எவ்வித இடையூறும் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக வந்து பயணிகளைச் சென்றடைகின்றன.

இது குறித்த காணொளி ஒன்று ட்விட்டரில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

இந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் தமிழர்கள் பலர் பகிர்ந்து, இந்த சூட்கேஸுகளை போல நம் மக்களும் ஒருவருக்கு ஒருவர் வழிவிட்டு பொறுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்த காணொளி குறித்து சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நம் சிங்கப்பூர் தமிழர்களுக்கு பயனுள்ள தகவல்களை எங்களுடன் பகிரவும்.

WhatsApp wa.me/6588393569  Messenger m.me/tamilmicsetsg