சாங்கியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் நடந்த சண்டையில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் 24 முதல் 54 வயதுக்குட்பட்ட ஒன்பது ஊழியர்கள் என்றும், தற்போது அவர்கள் போலீஸ் விசாரணைகளுக்கு உதவியதாக சொல்லப்பட்டுள்ளது.
தனா மேரா கோஸ்ட் சாலையில் உள்ள அந்த தங்கும் விடுதியில் நடந்த சண்டை குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் வருவதற்குள் சண்டை ஓய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இதில் சண்டையிட்டுக் கொண்டவர்கள் வெவ்வேறு நாட்டை சேர்ந்த ஊழியர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
CCTV காட்சிகள் மற்றும் விசாரணைகள் மூலம் கலகத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபர்களின் அடையாளங்களை போலீசார் கண்டறிந்தனர்.
இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.
Video: https://www.facebook.com/100055646190133/videos/1167104287343488/
சூட்கேஸில் சடலமாக கிடந்த வெளிநாட்டு ஊழியர் – துண்டு துண்டாக கிடந்த பிரேதம்