‘சென்னை, சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிரடி அறிவிப்பு!

Photo: Singapore Airlines Official Facebook Page

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவின் சென்னை, ஹைதராபாத், கொச்சி ஆகிய மூன்று நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு கூடுதல் விமான சேவை வழங்கப்படும். அதன்படி, கொச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே வரும் ஆகஸ்ட் 2- ஆம் தேதி முதல் கூடுதல் விமான சேவை வழங்கப்படும். சென்னை, ஹைதராபாத் மற்றும் சிங்கப்பூர் இடையே வரும் செப்டம்பர் மாதம் 2- ஆம் தேதி முதல் கூடுதல் சேவை வழங்கப்படும். வரும் ஆகஸ்ட் 5- ஆம் தேதிக்குள் விமான பயண டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படும்.

Coachella தயாரிப்பாளர்களுடன் ZoukOut-2022ற்கு இணையும் Zouk குழுமம் – ஸ்டேஜ் சும்மா பத்திக்க போது பாருங்க !

கொச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு, சிங்கப்பூரில் இருந்து கொச்சிக்கு தினசரி கூடுதல் விமான சேவை வழங்கப்படும். அதேபோல், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய ஆறு நாட்களுக்கு கூடுதலாக விமான சேவை வழங்கப்படும். சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை, புதன்கிழமை, வியாழன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய ஆறு நாட்களுக்கு கூடுதலாக விமான சேவை வழங்கப்படும்.

சிங்கப்பூர் நுகர்வோருக்கு நன்றி! – வாரி வாரி கோழி இறைச்சியை சிங்கப்பூருக்கு அனுப்பும் இந்தோனேசியா

ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கும் வாரத்தில் வியாழன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்களுக்கு கூடுதலாக விமான சேவை வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.