சென்னை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து, தினசரி இரண்டு நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines). இந்த நிலையில், வரும் மார்ச் 1- ஆம் தேதி முதல் சென்னை, சிங்கப்பூர் வழித்தடத்தில் மேலும் ஒரு நேரடி விமான சேவை வழங்கப்படும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அந்த விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது.
அதிபர் தேர்தலுக்கான சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் சிங்கப்பூர் பிரதமர்!
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இத்தகைய அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை, சிங்கப்பூர் வழித்தடத்தில் மட்டும் மூன்று தினசரி நேரடி விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்குகிறது.
அதேபோல், சென்னையில் இருந்து திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்கள் வழியாக சிங்கப்பூருக்கு தினசரி நான்கு விமான சேவைகளை இரு மார்க்கத்திலும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய குடியரசுத் தலைவருடன் சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திப்பு!
விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.