இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது.
குறிப்பாக, சென்னை சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவைகளை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், தற்போது வாரத்தில் திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் விமான சேவைகளை வழங்கி வருகிறது.
இது வரும் அக்டோபர் 30- ஆம் தேதி முதல் கூடுதல் விமான சேவைகள் வழங்கப்படும். குறிப்பாக, வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவை வழங்கப்படும்.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு IX 688 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு IX 687 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.
விமான சேவை மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் குறிப்பிட்டுள்ளது.