இந்தியாவின் டெல்லி, திருச்சி, சென்னை, கோவை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், கொச்சி, ஹைதராபாத், அகமதாபாத், அமிர்தசரஸ், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து விமானச் சேவையை வழங்கி வருகின்றன ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்கூட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள்.
அந்த வகையில், சென்னை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா (Air India) நிறுவனம். அதன்படி, AI 346 என்ற ஏர் இந்தியா நிறுவனத்திற்கு (Air India) சொந்தமான விமானம், சென்னை, சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் மே மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
அதேபோல், சென்னையில் இருந்து மும்பை வழியாகவும், டெல்லி வழியாகவும் சிங்கப்பூருக்கு என இரண்டு தினசரி விமானங்களை இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரில் வழக்கு தொடர்பாக ஆடவர் ஒருவரை தேடிவரும் போலீசார் – தகவல் தெரிந்தால் கூறும்படி கோரிக்கை
விமான பயண கட்டணம், பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindia.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.