திருச்சி, மதுரையைத் தொடர்ந்து, சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express).
அதன்படி, வாரத்தில் திங்கள்கிழமை மற்றும் வியாழன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் இவ்வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு IX 688 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு IX 687 என்ற விமானமும் இயக்கவுள்ளது. இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜூன் 9- ஆம் தேதி அன்று ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் பாலஸ்தாபன கும்பாபிஷேகம்!
பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.