‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம் (Air India Express), திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. அந்த வகையில், சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து, விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.
சென்னை இருந்து சிங்கப்பூருக்கு IX 688 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து சென்னை IX 687 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தட விமான சேவைக்கான, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான பயண டிக்கெட்டுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
“அலறும் ஆந்தை” – மெரினா கால்வாயில் இருந்து அசால்டாக மீட்கப்பட்ட டிக் டாக் வீடியோ
பயண அட்டவணை மற்றும் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.