‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.

அத்துமீறி இளம்பெண்ணின் தொடையைத் தடவிய விமானப்படை வீரர்! – மானபங்கம் செய்த குற்றத்திற்காக பணியிலிருந்து இடைநீக்கம்!

குறிப்பாக, சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம். இந்த வழித்தடத்தில் வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய நான்கு நாட்கள் மட்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவைகளை வழங்கி வருகிறது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு ஆரம்பக் கட்டணமாக ரூபாய் 9,189 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தட விமான சேவைக்கான டிசம்பர், அடுத்தாண்டு ஜனவரி , பிப்ரவரி மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது நல்லாருக்கே! நன்றாக விமானத்தில் நடந்து கொண்டன!- உல்லாசமாக விமானத்தில் பறந்த நாய்க்குட்டிகள்!

விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.