‘சென்னை- சிங்கப்பூர் இடையே ஸ்கூட் விமான சேவை தொடங்கியது’- விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

'சென்னை- சிங்கப்பூர் இடையே ஸ்கூட் விமான சேவை தொடங்கியது'- விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
Photo: Singapore In India Twitter Page

 

சென்னை- சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளைத் தொடங்கியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot). கடந்த நவம்பர் 05- ஆம் தேதி நள்ளிரவு 12.06 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஸ்கூட் விமானத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாசிர் ரிஸில் ஜாக்கிங் சென்றவரை துரத்திய நாய்கள் – வீடியோ இணையத்தில் வைரல்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஸ்கூட் விமான நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்னிந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

'சென்னை- சிங்கப்பூர் இடையே ஸ்கூட் விமான சேவை தொடங்கியது'- விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
Photo: Singapore In India Twitter Page

அதைத் தொடர்ந்து, ஸ்கூட் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், கேக் வெட்டிக் கொண்டாடினர். பின்னர், விமானத்துடன் குழு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டனர்.

“மக்கள் ஏன் இவ்வளவு ரூடாக இருக்கிறார்கள்” – சிங்கப்பூர் வந்த சுற்றுலா பயணி கவலை

இதனிடையே, சென்னை- சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.