‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

தமிழகத்தில் திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் ‘Non- VTL’ விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

“வாரத்தில் 59 மணிநேரம் வேலை” செய்யும் உணவு விநியோக & தனியார் வாடகை ஓட்டுநர்கள்

அந்த வகையில், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX 688 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து திருச்சி IX 687 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவையானது ‘Non-VTL’ என்பதால், சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் கட்டாயம், சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடைமுறையை மீறிய 2 இந்திய வம்சாவளி ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

இந்த நிலையில், சென்னை, சிங்கப்பூர் இடையேயான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் என்ற https://www.airindiaexpress.in/en அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.