“சென்னை, சிங்கப்பூர் இடையே விமான சேவை”- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்கூட் நிறுவனம்!

"சென்னை, சிங்கப்பூர் இடையே விமான சேவை"- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்கூட் நிறுவனம்!
Photo: Flyscoot

 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் நவம்பர் 5- ஆம் தேதி முதல் சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி மற்றும் நேரடி விமான சேவை இரு மார்க்கத்திலும் தொடங்கப்படும். இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது.

துவாஸ் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் மரணம் – மயக்க நிலையில் கிடந்தவர் மரணித்த சோகம்

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு ஆரம்பக் கட்டணமாக 8,307.40 ரூபாயாகவும், சிங்கப்பூரில் இருந்து சென்னை செல்வதற்கு ஆரம்பக் கட்டணமாக 10,846 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாங்கி நீர்நிலையில் மிதந்த ஆடவர் உடல்… இறந்தது உறுதி: யார் அவர் ? – போலீஸ் விசாரணை

விமான பயண அட்டவணை, பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் நிறுவனத்தின் (Flyscoot) அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.