சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த 2 பேர் கைது; வீண் வேலையில் ஈடுபட்டால் கைது உறுதி

(Photo: Indian Express)

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த 2 நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துக்கு தனியார் விமானம் கடந்த 24ந் தேதி இரவு புறப்பட இருந்தது.

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் ஊழியர்… கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய 25 பவுன் நகை கொள்ளை – சிக்கிய கும்பல்

இந்நிலையில், அதிகாரிகள் பயணிகளை வழக்கம் போல சோதனை செய்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த 2 பேர் அமெரிக்க டாலர்களை கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது அவர்கள் 20,400 அமெரிக்க டாலர்களை உள்ளாடைகளில் மறைத்து கடத்த இருந்தது தெரியவந்தது.

அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற 3 பேரிடமும் அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Work pass அனுமதியில் குளறுபடி; அதிரடி அமலாக்க சோதனை… சிக்கிய ஊழியர்கள்