சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் பயணிகளுக்கான  அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்!

Photo: Air India Express Official Twitter Page

இந்தியாவைச் சேர்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது. சென்னை மற்றும் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் குறிப்பிட்ட நாட்களிலும், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை அந்நிறுவனம் வழங்கி வருகிறது.

“திருப்தியா இருக்கு! ” – சிங்கப்பூரில் தங்கி பணிபுரிவது திருப்தியாக இருப்பதாக தெரிவித்த இல்லப் பணிப்பெண்கள்

இந்த நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சென்னை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் ஆரம்ப கட்டணமான ரூபாய் 9,000 கட்டணத்தில் பயணிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தைப் பார்த்தபோது, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 9,231.37, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 9,296.37, மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 9,753.67 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் HDB மறுவிற்பனை பிளாட்களுக்கான விலைகள்

இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டள் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.