சீனப் புத்தாண்டு நெருங்கி கொண்டுள்ள வேளையில், சைனாடவுன் வழக்கம் போல் பண்டிகை அலங்காரங்களால் வண்ணமயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய புலி ஆண்டை வரவேற்கும் வகையில், பிரமாண்டமான புலி அலங்காரங்கள் அங்கு இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக ஈர்க்கக்கூடிய வகையில் பெரிய காட்சி அலங்காரங்கள் Upper Cross Street மற்றும் New Bridge ரோட்டில் உள்ள சந்திப்பில் அமைந்துள்ளன.
தெரு ஒளியூட்டு மற்றும் துவக்க நிகழ்வுகள் அதிகாரப்பூர்வமாக நாளை ஜனவரி 7ஆம் தேதி தொடங்கும்.
அதற்கு முன்பே பல புகைப்படக் கலைஞர்கள் அங்கு சில காட்சிகளைப் படம்பிடித்து செல்வதும் அரங்கேறி வருகிறது.
இரவில் புலிகள் வண்ண விளக்குகளால் ஒளிரும் போது பார்க்கும் நமக்கே மிரட்டலாக தெரிகின்றன.
சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மகன்கள்…கொலை செய்யப்பட்ட விவசாயி தந்தை – போலீசார் தீவிர விசாரணை