சிங்கப்பூரில் உள்ள 2001 லோர் 8 தோ பயோக்கில் (2001 Lor 8 Toa Payoh) அமைந்துள்ளது ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple). இந்த கோயிலில் வரும் மே 5- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சித்ரா பௌர்ணமி பூஜை (Chitra Pournami Prayers) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 10:30 மணி முதல் பௌர்ணமி பால்குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். பால்குட அபிஷேகத்தில் பங்கேற்க விரும்புவோர், அதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.
மே 5- ஆம் தேதி அன்று காலை 07.00 மணிக்கு நித்ய பூஜையும், காலை 07.30 மணிக்கு யாகசாலை பூஜையும், ஹோமமும், காலை 08.30 மணிக்கு பூர்ணாஹூதியும், தீபாராதனையும், காலை 09.00 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 09.45 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், காலை 10.00 மணிக்கு ஸ்ரீ காளியம்மன் அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு பால்குட அபிஷேகமும் நடைபெறும்.
காலை 11.00 மணிக்கு கலசபிஷேகமும், மதியம் 12.15 மணிக்கு பிரசாதம் விநியோகமும், மாலை 06.00 மணிக்கு நித்ய பூஜையும், இரவு 07.00 மணிக்கு உபய பூஜையும், இரவு 07.30 மணிக்கு கொடி இறக்குதலும், இரவு 08.15 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 09.00 மணிக்கு பிரசாதம் விநியோகமும், இரவு 09.15 மணிக்கு மௌன உற்சவமும் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.