ஆடவரை கத்தியால் தாக்கிய 28 வயது நபர்; சுற்றி வளைத்து தூக்கிய போலீஸ்

இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் - கடும் கோபத்தில் செய்த கொடூர செயல்
(Photo: TODAY)

ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் ஆடவர் ஒருவரை வேண்டுமென்றே கத்தியால் தாக்கியதாக மற்றொரு ஆடவர் மீது இன்று (ஜூலை 15) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஜாலான் புக்கிட் மேராவில் பிளாக் 116ல் நடந்தது என்றும், இது தொடர்பாக நேற்று (ஜூலை 14) பிற்பகல் 4 மணியளவில் புகார் கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத மிரட்டல் அதிகம்… அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 28 வயதான குற்றம் சாட்டப்பட்ட நபர், தாக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆடவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதனை அடுத்து கத்தியை கொண்டு கை, கால்களில் அவர் ஆடவரை தாக்கியதாக நம்பப்படுகிறது. இதில் சம்பவம் நடந்த இடத்தில் இரத்த கரைகள் படிந்து இருந்ததாக போலீஸ் கூறியுள்ளது.

பின்னர் பாதிக்கப்பட்ட ஆடவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனை தொடர்ந்து சம்பவம் இடத்திலேயே சந்தேக ஆடவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.

பொது போக்குவரத்தில் பிறப்புறுப்பை காட்டிய ஆடவர் – பல முறை அவ்வாறு செய்ததாக புகார்