சிட்டி மற்றும் இ-காமர்ஸ் தளமான லாசாடா குழுமம் திங்கள்கிழமை இன்று சிங்கப்பூரில் சிட்டி லாசாடா என்ற புதிய கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான நுகர்வோரின் வாங்கும் சக்தியைத் தூண்டுவதற்கு இது உறுதுணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், அடுத்த சில ஆண்டுகளில் புதிய அட்டையுடன் உள்நாட்டில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இளம் தொழில் வல்லுநர்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிட்டி லாசாடா கிரெடிட் கார்டு வெளியீடு என்பது சிட்டி மற்றும் லாசாடாவின் பிராந்திய கூட்டாண்மைக்கான இயற்கையான நீட்டிப்பாகும், இது 2015 இல் சிங்கப்பூரில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
அடுத்த சில ஆண்டுகளில், தென்கிழக்கு ஆசியாவில் சுமார் 500,000 க்கும் மேற்பட்ட புதிய கடன் அட்டைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூரில், ஆண்டின் முதல் 11 மாதங்களில், 18-35 வயதுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் ஆண்டுக்கு 43 சதவீதம் வளர்ச்சியை லாசாடா கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நம் சிங்கப்பூர் தமிழர்களுக்கு பயனுள்ள தகவல்களை எங்களுடன் பகிரவும்.
WhatsApp wa.me/6588393569
Messenger m.me/tamilmicsetsg