அரசு ஊழியர்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான ஒரு மாத ஆண்டு இறுதி போனஸ்!

(PHOTO: TODAY)

சிங்கப்பூரில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான ஒரு மாத ஆண்டு இறுதி போனஸ் வழங்கப்படும்.

சிங்கப்பூர் அரசாங்கம், பொதுத்துறை தொழிற்சங்கங்களுடன் இணைந்து மேற்கொண்ட ஆலோசனையில், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு மாத ஆண்டு இறுதி போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நிறுவனத்தை ஏமாற்ற போலியாக நடித்த வெளிநாட்டு ஊழியர் விடுவிப்பு

MX15 மற்றும் MX16-க்கு சமமான கிரேடுகளில் உள்ள அரசு ஊழியர்கள், அதே போல் OSS கிரேடு III முதல் V வரை உள்ள அதிகாரிகளுக்குக் கூடுதலாக ஒரு முறை S$500 வழங்கப்படும்.

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 13வது மாத போனஸ் எனப்படும் ஓய்வூதியம் அல்லாத வருடாந்திர படித்தொகையை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும்.

கோவிட் -19க்கு எதிரான போராட்டத்தில் அதிகாரிகளின் தொடர் கடின உழைப்பு மற்றும் பல்வேறு பங்களிப்புகளுக்கு இது அங்கீகாரம் என்று பொது சேவை பிரிவு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை’- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!