கிளமென்டியில் உள்ள Build-to-Order (BTO) அடுக்குமாடி வீடு கட்டுமான தளத்தில் இன்று (செப் 2) காலை நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.
சுங்கே உலு பாண்டனில் ஏற்பட்ட மண் விரிசலால் இந்த சம்பவம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக உலு பாண்டன் பூங்கா இணைப்பிற்கு சேதம் ஏற்பட்டதாகவும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (HDB) ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட ஆடவருக்கு சில சிறிய காயங்கள் ஏற்பட்டது.
மேலும் அங்கேயே அவர் சிகிச்சை பெற்றார், தற்போது வீட்டில் நலமுடன் ஓய்வெடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவையான கூடுதல் உதவிகளை வழங்க HDB கழகம் அவருடன் தொடர்பில் உள்ளதாக கூறியுள்ளது.
கூடுதலாக மற்ற காயங்கள் எதுவும் யாருக்கும் இதில் ஏற்படவில்லை.
“விநாயகனே வினை தீர்ப்பவனே”… சிங்கப்பூரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி