தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிங்கப்பூர் வருகை தர உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது குறித்து நாம் முன்னர் கூறினோம்.
அதனை முன்னிட்டு அமைச்சர்களுடன் அவர் 23, 24ஆம் தேதிகளில்
சிங்கப்பூர் வருகை தருவதாக சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சங்கம் கூறியுள்ளது.
வருகையின்போது தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் உள்ள முதலீடுகள் அதன் வாய்ப்புகள் குறித்து பேசப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான சந்திப்பு மாநாடு வரும் 24 ஆம் தேதி நடைபெறும்.
முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூரில் இருக்கும்போது அவருடன் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் P குமரன் உடன் இருப்பார்.
மேலும் போக்குவரத்து அமைச்சர் S ஈஸ்வரன் அவர்களும் உடன் இருப்பார் என சொல்லப்பட்டுள்ளது.