அதிரடி சோதனையில் சிக்கிய 6 பேர் – குற்றம் உண்மையா… தொடரும் விசாரணை

6 arrested in CNB bust

சிங்கப்பூர்: போதைப்பொருள் கடத்தல் சந்தேகம் தொடர்பில் 24 முதல் 54 வயதுக்கு உட்பட்ட 6 சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் நவ.29 முதல் நவ.30 வரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) நடத்திய சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.

உலகின் விலையுயர்ந்த நகரம் “சிங்கப்பூர்” – ஊழியர்களால் சமாளிக்க முடிகிறதா?

இந்த நடவடிக்கையின் போது S$304,000 மதிப்புள்ள 8 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக CNB நேற்று (டிசம்பர் 1) தெரிவித்துள்ளது.

ஆறு சந்தேக நபர்களிடமும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஊழியர் மரணம் – சமீபத்தில் மட்டும் 2 ஊழியர்கள் பலி