மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) நடத்திய இரண்டு நாள் அதிரடி சோதனை நடவடிக்கையில், சுமார் S$768,000 மதிப்புடைய சுமார் 7 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இந்த சோதனையில் 38, 48 மற்றும் 58 வயதுடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும் CNB தெரிவித்துள்ளது.
மொத்தம் 3.862 கிலோ ஐஸ் வகை போதைப்பொருள், 1.873 கிலோ கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக CNB இன்று (ஜனவரி 30) கூறியது.
கடந்த வெள்ளிக்கிழமை, லாவெண்டர் ஸ்ட்ரீட்டுக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டல் அறையில் 48 வயதான நபரை CNB அதிகாரிகள் கைது செய்தனர்,
அதே போல அன்று மாலை, 38 வயதான மற்றும் 58 வயதான இருவர், Hougang Avenue 3 அருகிலுள்ள தொழில்துறை கட்டிடத்தில் கைது செய்யப்பட்டனர்.
வாகனத்தில் சடலமாக இறந்து கிடந்த ஓட்டுநர் – இயற்கைக்கு மாறான மரணம் குறித்து விசாரணை