இந்தியாவின் முக்கிய நகரங்களான கோவை, திருவனந்தபுரம் ஆகிய இரண்டு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இருமார்க்கத்திலும் விமான சேவை வழங்கப்படும் என்று ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Scoot Airlines) அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் அனுப்பிய மருத்துவப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட ஃபிஜி!
அதன்படி, வரும் டிசம்பர் 29- ஆம் தேதி முதல் கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படும். இது நேரடி விமானச் சேவை ஆகும். இருமார்க்கத்திலும் விமான சேவை வழங்கப்படும். ஸ்கூட் நிறுவனத்தின் A320neo என்ற விமானம் இயக்கப்படும். கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு குறைந்தபட்ச விமான பயண கட்டணமாக ரூபாய் 5,999.86 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் டிசம்பர் 28- ஆம் தேதி முதல் திருவனந்தபுரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படும். திருவனந்தபுரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல குறைந்தபட்ச விமான பயண கட்டணமாக ரூபாய் 5,499.86 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிச.29 முதல் விசாகப்பட்டினம், சிங்கப்பூர் இடையே விமான சேவை- ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
மிக குறைந்த கட்டணத்தில் இந்தியா, சிங்கப்பூர் இடையேயான விமான சேவையை ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், விமான பயண டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான சேவை தொடர்பான பயண அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ https://www.flyscoot.com/en என்ற இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.