குறுக்குத் தீவு ரயில் பாதையின் (Cross Island Line) முதற்கட்ட கட்டுமான பணிகள் இன்று புதன்கிழமை (ஜன.18) தொடங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் எட்டாவது MRT ரயில் பாதை இது என்று குறிப்பிடப்படுகிறது.
இது முழுமையாகச் செயல்படும் போது, கிட்டத்தட்ட பாதி ரயில் நிலையங்கள் சந்திப்பு நிலையங்களாக செயல்படும்.
கட்டம் 1 மற்றும் கட்டம் 2 க்கான சந்திப்பு நிலையங்கள்:
கிழக்கு-மேற்கு பாதையில் உள்ள பாசிர் ரிஸ் மற்றும் கிளெமென்டி, வடகிழக்கு பாதையில் உள்ள ஹௌகாங், வடக்கு-தெற்கு பாதையில் உள்ள ஆங் மோ கியோ, தாம்சன்-கிழக்கு கடற்கரை பாதையில் பிரைட் ஹில் மற்றும் டவுன்டவுன் லைனில் கிங் ஆல்பர்ட் பார்க் ஆகியவை ஆகும்.
குறுக்குத் தீவு ரயில் பாதையின் கட்டம் மூன்றில் உள்ள நிலையங்களுக்கான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.