தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவரை நேரில் சந்தித்த சிங்கப்பூர் துணைத் தூதர்!

Photo: Tamilnadu Government

ஜனவரி 30- ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை சென்னையில் உள்ள இந்தியாவுக்கான சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் தூதர் எட்கர் பங் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

மலேசிய பிரதமருக்கு மதிய விருந்து வைத்து உபசரித்த பிரதமர் லீ சியன் லூங்!

அப்போது, சிங்கப்பூர் துணைத் தூதருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த சந்திப்பின், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் உடனிருந்தார்.

Photo: Tamilnadu Government

அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனை நேரில் சந்தித்த சிங்கப்பூர் துணைத் தூதர் எட்கர் பங் அவருக்கு பூங்கொத்து வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் அவர்கள் எட்கர் பங்- க்கு பட்டு துண்டை அணிவித்தார். இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் முனைவர் எம்.ஜெயந்தி இ.வ.ப. உடனிருந்தார்.