கண்டெய்னர் சரிந்து விழுந்ததில் இந்தியாவைச் சேர்ந்த நபர் நினைவிழப்பு! -லாரியின் ஒரு பகுதி நசுங்கியது!

container crash truck singapore incident

சிங்கப்பூரின் துவாஸ் சவுத் அவென்யூ 12-இல் கனரக லாரி மீது கண்டெய்னர் அடுக்கு சரிந்து விழுந்ததில் லாரியின் ஒரு பகுதி நசுங்கியது.கண்டெய்னர் சரிவதைக் கண்டு தப்பிக்க முயன்ற ஓட்டுனர் பக்கத்து இருக்கைக்கு தாவினார்.

ஒரு ஓட்டுனர் சிறிய காயங்களுடன் தப்பித்த நிலையில் மற்றொரு ஓட்டுனர் நினைவிழந்தார்.விபத்துக்குள்ளானவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பணியிட விபத்து சனிக்கிழமை ஏற்பட்டதாக இன்ஸ்டா கிராமில் வெளியிடப்பட்டது..லேசான காயங்களுடன் உயிர் தப்பிய கனரக வாகன ஓட்டுனர் இங் டெங் பொங் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.விபத்து நேர்ந்த போது பதிவான வீடியோ முகநூல் பக்கத்தில் வெளியானது.