சிங்கப்பூர் வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 13) முதல் COVID-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த உள்ளது.
அதாவது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள் இனி சிங்கப்பூர் வந்தவுடன் நெகடிவ் சான்றிதழை காட்ட தேவையில்லை.
இந்த புதிய பயண கட்டுப்பாட்டு நீக்கம் வரும் பிப்.13 முதல் நடப்புக்கு வரும் என சிங்கப்பூர் கூறியுள்ளது.
அதே போல, குறுகிய கால பயணிகள் முழு தடுப்பூசி போடவில்லை என்றாலும் காப்பீடு வாங்கவும் தேவையில்லை.
இந்த கட்டுப்பாடுகள் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
சர்வதேச தொற்றுநோய் பாதிப்பு நிலையை பொறுத்து இதில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.