முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 90 வயது முதியவர் COVID-19 காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக. 17) உயிரிழந்தார் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் முதல் முதலாக தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட நபர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்.
சிங்கப்பூரில் இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் எட்டு பேர் கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அவருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய மருத்துவ பிரச்சனைகள் ஏற்கனவே உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் 45 பேர் கோவிட் -19 நோயால் இறந்துள்ளனர்.