சிங்கப்பூர் ஜூரோங் ஈஸ்ட் பகுதியின் பெஞ்சுரு லேனில் உள்ள கட்டுமானத் தளத்தில் கிரேன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (பிப்.18) காலை 10 மணிக்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது.
இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
சிங்கப்பூரில் Employment Pass வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் உயர்வு..!
கிரேன் விழுந்தது குறித்து தங்களுக்கு எந்தவித தகவல் ஏதும் கிடைக்கவில்லை என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.
கிரேன் விழுந்து கிடப்பதைக் காட்டும் படங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்க்கு அதன் வாசகர் ஒருவரால் அனுப்பப்பட்டது. அதில் தரையில் கிடந்த கிரேனை சுற்றி இடிபாடுகள் இருப்பதைப் காண முடிந்தது.
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அறிக்கையின்படி, கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 23 வேலையிட மரணங்கள் பதிவாகியுள்ளது.